Saturday, February 23, 2013

டாக்காவில் தமிழர் திருநாள் !!!

டாக்காவில் தமிழர் திருநாள் !!!

தனிப்பட்ட நண்பர்களின் முயற்சியில் எந்த ஒரு அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு இன்றி குழுவாக வேலை செய்து 160 பேர் வரையிலான தமிழர்களை திரட்டி பொங்கல் விழாவை பிப் 21 அன்று நடத்தினோம்..
இது டெல்லி போன்ற தமிழ் சங்கம் இங்கே வருவதற்கான ஆரம்ப கட்ட வேலை போல் தோன்றியது..

அரசியல் நிலை இந்தியாவுக்கு எதிராக மாறாமல் இருக்கும் பட்சத்தில் இன்னும் 20-30 வருடங்களுக்கு இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் இங்கே நன்முறையில் வேலை செய்ய முடியும்..எனவே ஒரு தமிழர்கள் அமைப்பு கட்டாயம் தேவை ,

குழந்தைகளும் பெண்களும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கான களம் போலவும், நான்கு சுவர்களுக்குள் அடைந்து இருக்காமல் புதிய நட்பு வட்டத்தை பெறுவதற்கான ஒரு களம் போலவும் இந்த நிகழ்ச்சி செயல்பட்டது மகிழ்ச்சியான நிகழ்வு ...