Saturday, December 24, 2011

உண்மையில் பெட்டி தான் முட்டாளா?

முட்டாள் பெட்டி என்று அழைக்கப்படும் டிவி யின் முன்பு தான் எங்கள் பொழுது எல்லாம் கழிகிறது... அதுவும் டாக்கா வில் வேலைக்கு வந்த பின் வேறு பொழுது போக்கு எதுவும் இலாத ஒரு நகரத்தில்... செட் டாப் பாக்ஸின் வழியே வரும் ஒரு சில ஊடகங்களை தவிர வேறு எதுவும் பொழுது போக்கு இல்லை என்ற நிலை வந்து விட்டது..தமிழ் பேசும் மற்றும் பேசாத இந்தியர்கள் கணிசமான பேர் இருந்தும் நண்பர்களாக நம் பொழுதுகளை நிரப்பும் அளவிற்கு இன்னும் யாரும் வராத நிலையில் டிவியன்றி வேறு பொழுது போக்கு ஏது..

என்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் டிவியை இவ்வளவு தூரம் அண்டியிருக்க வேண்டிய நிலை வந்தது இப்போதுதான்...

தமிழகத்தின் முன்னணி சேனல்கள் எல்லாம் தெரியும் நிலையில் .. எனக்கு தோன்றியதெல்லாம் இது தான்..ஒரு சாதாரண பார்வையாளன் ஆகிய எனக்கே எந்த சேனலின் நிகழ்ச்சிகளும் தரம்ஆகவோ சுவராஸ்யம் ஆகவோ இல்லை என தோன்றும் பொது நம் சேனல்கள் அறிவை வளர்க்க எந்த பலனும் கொடுக்க போவது இல்லை என்பதே தெளிவு ...

சமீபத்தில் ஒரு சேனலில் குழந்தை பராமரிப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சி (அப் கோர்ஸ், விளம்பரதாரர் நிகழ்ச்சி தான்) பார்த்த பொது தான் கணக்கு போட ஆரம்பித்தேன். நாள் முழுக்க தேடி பார்த்தாலும் சுவையான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் எத்தனை என்று.. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கூட உங்களால் நல்ல நிகழ்ச்சி பார்க்க முடியாது..

இது கற்பனை வறட்சி யா இல்லை எது வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம்.. மக்கள் பார்ப்பார்கள் என்ற மமதையா ..

இது எல்லாம் பார்க்கும் போது அந்த பெட்டி தான் முட்டாளா என்ற குழப்பம் வரவில்லை ?

Monday, August 15, 2011

மெல்லத் தமிழினிச் சாகுமா ??

இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானாவில் சில பேரின் பேச்சு நமக்கு கிடைத்த சுதந்திரம் நல்ல விதமாகத்தான் பயன் படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.. ஒரு நண்பர் கேட்கிறார் " நான் தாய்மொழியில் பேச முயற்சிப்பதால் எனக்கு என்ன லாபம்.... தாய் மொழி என்பது உணர்ச்சி பூர்வமான விஷயம் அல்ல என்றாலும்.. நமக்கான அடையாளம் அது என்ற விதத்திலாவது நாம் நம் மொழியை வளமானதாக வைத்திருக்க வேண்டும்...

மொழி என்பது பிற கலப்பில்லாது இருக்க வேண்டும் என்பதற்காக தான் தாய் மொழி என்கிறோம்.. தந்தையில் கூட கலப்பு இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கூட தாயின் பெயரை வைத்திருக்கலாம்.

நம் மொழியின் கலைச்சொல் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் கொடுக்காது.. இருக்கின்ற கலைச்சொற்களை உபயோகமும் படுத்தாமல் வெறும் பழிச்சொல் மட்டும் பேச வருகின்ற தலைமுறையினர் மிகுந்து வருவது தற்கொலை முயற்சிக்கு சமமான ஆபத்து...

மொழி சார்ந்த ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய பலர் அரசியல் சார்புள்ளவர்கள் ஆக இருப்பது பெரும் சாபக்கேடு.. மொழியியல் அறிஞர்களும் ஏதேனும் ஒரு பக்கம்
சார்பு நிலை எடுத்து தான் தங்கள் வாழ்வை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலை..

தமிழ் இனி மெல்ல சாகுமா ???

Friday, August 12, 2011

குட்டியாய் இயற்கை...

தொலைவிலிருக்கும் போது நிலவாக
தொட்டுத்தழுவும்போது தென்றலாக
கோபப்படுகையில் சுடர் சூரியனாக
கொஞ்சும்போது குளிர் நீராக
ஆசை வைப்பதில் மலையாக
அன்பு காட்டுவதில் ஓர் அருவியாக

இப்படி எனக்கான உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய் என் குட்டி !!!

நீ நீயாய் நான் நானாய்....

அழுக்கு நிலவிலிருந்து எட்டி பார்கிறேன் ,
நட்சத்திரங்களின் வழியே கண் சிமிட்டுகி்றேன்,
நீல வான் வெளியாய் உன்னை அணைக்க பார்க்கிறேன்,
திறந்திருக்கும் ஜன்னல் வழியே காற்றாய் நுழைகிறேன்,
நீ கட்டும் ஆடையில் நூலாய் இழைகிறேன்,
கண் சுருக்கி நீ சிரிக்கையில் செத்து போகிறேன் ...