Friday, August 12, 2011

நீ நீயாய் நான் நானாய்....

அழுக்கு நிலவிலிருந்து எட்டி பார்கிறேன் ,
நட்சத்திரங்களின் வழியே கண் சிமிட்டுகி்றேன்,
நீல வான் வெளியாய் உன்னை அணைக்க பார்க்கிறேன்,
திறந்திருக்கும் ஜன்னல் வழியே காற்றாய் நுழைகிறேன்,
நீ கட்டும் ஆடையில் நூலாய் இழைகிறேன்,
கண் சுருக்கி நீ சிரிக்கையில் செத்து போகிறேன் ...

No comments:

Post a Comment