Tuesday, September 27, 2016

வலி மிகுந்த பதிவு ஒன்றை பொன்ராஜ் பதிவிட்டிருந்தார்., அரிக்காமேடு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு அல்ல.. ஈரோடு அருகே உள்ள கொடுமணல் ஊர் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டாலும்.. iron age வகையை சேர்ந்த இது தொல்லியல் துறையால் காப்பாற்றப்படவேண்டும் ..நிதி பற்றாக்குறையால் அகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,, பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது.


மாமல்லபுரம் அருகே கடலின் அடியில் கிட்டத்தட்ட 12-15 அடி  உயரத்தில் 40 மீ உயரத்தில் கட்டிட கல் அமைப்புகள் உள்ளன..இது அகழ்வு செய்யப்படவில்லை அதற்கான முயற்சிகளும் ஊக்குவிக்கப்படவில்லை ..Graham Hancook இன் டாகுமென்டரியை யூ டியூபில் காண்க. இது சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் மொத்த தமிழ்நாட்டுடன் புவி ரீதியாக இணைந்திருந்த தெற்காசிய நாகரீகத்தை கண்டு பிடிக்க முடியும்..


மரக்காணம் அருகே ஓணம்பாக்கத்தில் மெகாலிதிக் அல்லது iron age cairns circle பகுதி கல் குவாரிகளின் பிடியில் சிக்கி அழிய உள்ளது.. பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது. TS சுப்ரமணியன் அவர்கள் பதிவையூ டியூபில் காண்க .. மறுபடியும் நிதி இல்லாமை இங்கு ஒரு குறை..
 
ஆதிச்சநல்லூரில் 150 ஏக்கரில் 75 சென்ட் மட்டுமே அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நமது ASI ஹரப்பா பகுதியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறது ..இதில் பிரதேச அரசியல் மிகப்பெரிய அளவில் இயங்குகிறது..நிதி, ஆர்வம் பாதுகாப்பு மூன்றும் மிக முக்கியம் இப்போது ..

No comments:

Post a Comment