Friday, December 2, 2016

கனவு

அற்புதக்கனவு அமைந்த இரவு நேற்றிரவு
ஜெயகாந்தனோடு நானும் எனது தந்தையும் அவர் வீட்டிலிருந்தோம்..
விருந்து முடித்து விழுந்த பாத்திரங்களை
கழுவ முற்பட்டார் மீசைக்கார சிங்கம்
அவரைத்தடுத்து பாத்திரங்களை வாங்கிக்கொண்டு
பேசச்செல்லுமாறு வேண்டினேன்
அதுவோ விருப்பம்போலும் ..சிங்கம் விலகிப்போய் பேச அமர்ந்தது
காதைத்தீட்டி கவனித்துக்கேட்டேன்
கொடைக்கானல் மலைசிகரங்களையும்
வங்கதேசத்து கழிமுகத்துவாரங்களையும்
ஒப்பிட்டுப்பேசிக்கொண்டிருந்தது சிங்கம்
ஒன்றும் புரியவில்லை !!!
மலைகளின் அரசிக்கும் நீரோடும் பள்ளத்துக்கும்
என்ன உறவு இருக்கும்..
ஞானத்தகப்பன் பேசுவது புரிந்தால்
ஞானக்குழந்தை ஆகிவிடமாட்டோமா !!!
பாத்திரங்களைத்துலக்க ஆரம்பித்துவிட்டேன்

No comments:

Post a Comment