Saturday, February 27, 2016

பிணைப்பு



விட்டு விட்டு பெய்யும்மழை போலன்றி
விடாது இலைகளை உதிர்க்கிறது
இலையுதிர்கால மரமொன்று...

காட்டு எலி ஒன்றை முதல் வேட்டையாடிய
குட்டியை எட்ட நின்று பார்த்து
மௌனமாக நகர்கிறது தாய்ச்சிங்கம்...

வேரடி மண்ணோடு பெயர்க்கப்பட்டு
டெம்போ வேனில் மலர்ச்சியோடு பயணிக்கிறது
இன்னொரு விவசாயிக்கு உயிர் கொடுக்கபோகும் தென்னங்கன்று...

பிறந்து இரண்டொரு நாட்களில் தன் விரல் பிடித்த
மகன் கையை அவனது அறுபதிலும் விட அஞ்சுகிறாள்
தமிழ்த்தேசம் வளர்த்தெடுத்த தாயொருத்தி...

 

No comments:

Post a Comment