Sunday, August 21, 2016

இன்று எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்ரா) வின் முகநூல் பக்கத்தையும் அவருடைய இணைய தளத்தையும் வாசித்துக்கொண்டிருந்த போது, எழுத்துக்காகவே தனது வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் எப்படி அர்ப்பணித்துக்கொள்ள முடியும், அதுவும் அந்த அர்ப்பணிப்பு அவரது வாழ்வின் பெரும்பகுதி நேரம் அதற்க்கான பலனையே தராமல் இருந்த போது ..




இது போன்ற எழுத்தாளர்கள் தான் தமிழ் இலக்கிய சூழலை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள், பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் கூட வாங்கியே இருக்காத கோடிக்கணக்கான மக்களைக்கொண்டிருக்கிறது நமது சமூகம்..எந்த புத்தகத்தின் தாள்கள் கூடிய விரைவில் பணத்தாள்களை ஈன்றெடுக்குமோ அந்த புத்தகங்களை மட்டுமே வாங்குவதற்கு நமது சமூகம் ஆர்வம் காட்டுகிறது..




அதே சமயம் எந்த புத்தகம் பணத்தாள்களை பெற்றுத்தருகிறதோ, அந்த புத்தகத்தையும் தேவை தீர்ந்ததும் கசக்கி எரியும் கழிவறை காகிதம் போல பழைய புத்தகக்கடையில் பேரம் பேசி விற்கும் ஒரு சூழல் எங்கிருந்து பிறந்தது..




இந்திய அவசர யுகத்தின் மிகப்பெரிய தொழிலான மென்பொருள் துறைக்கு நாம் நம்முடைய பல படைப்பாளிகளை, திறமையாளர்களை, விளையாட்டு வீரர்களை, சமூக ஆர்வலர்களை பாலி கொடுத்துவிட்டோமோ என்று தோன்றுகிறது..இது அந்த துறையின் மீதான குற்றசாட்டு அல்ல, பலி கொடுத்த இரக்கமற்ற சமூகத்தின் குற்றம் மட்டுமே ...




உணவு, உடை, குடி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் காப்பி அடிக்க மேற்கத்திய நாடுகளை நாடும் நாம்...அவர்களின் வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தை கொண்டாடும் கலாச்சாரத்தையும் ( இன்னும் நிறைய இருக்கிறது)  ஏன் திறமையாக  ம(றை) க்கிறோம்..


எட்டு வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துள்ள நண்பர்கள் சொல்லுங்கள் வாசிப்பு பழக்கம் அடுத்த தலைமுறையிடம் இருக்கிறதா?




 

No comments:

Post a Comment